தூத்துக்குடியில் திடீர் கோடை மழை
துாத்துக்குடியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் முதலே வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் சுமார் 3.15 மணிமுதல் சுமார் அரை மணி நேரம் துாத்துக்குடியில் மழை பெய்தது. ஆனாலும் இந்த மழை போதாது இன்னும் சிறிது நேரம் அதிகமாக பெய்திருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
No comments