முதன்மை செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைத்த -நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைத்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22-ம் தேதி போராட்டத்தின்போது போலீஸ் வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புகளுக்கும் தீ வைக்கப்பட்டன.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைத்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் வியனரசுவை கைது செய்துள்ளதாக தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments